கடந்த
சனிக்கிழமை மார்ச் –17 , மதுரையில் நடந்த தலித் கலைவிழா மிக அருமையான பல தாக்கத்தை
தந்தது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது ஒவ்வொரு மாவட்டங்களின் மூலைகளில் தேங்கிக்கிடக்கும்
வளங்களை ஒரு பொது மேடையில் வைத்து கௌரவம் செய்வது தான் இந்த தலித் கலை விழா எனபது
என் அறிவுக்கு எட்டும் வகையில் அமைந்த ஒன்று. மண்ணின் மைந்தர்கள் தான் தொடர்ந்து தங்கள் ஓடுக்கபட்ட வாழ்க்கை
பாதையிலும் தொடர்ந்து இந்த இசைக்கலையை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்பதற்கு பல
சாட்சிகள் தொடர்ந்து இருந்து வருகின்றது.
அந்த மேடையில் பற்பல
ஆட்டங்கள் ராஜாராணி-ஆட்டம்,குச்சி-ஆட்டம், கரகாட்டம்,மற்றும் பறைஆட்டம் இதில்
குறிப்பாக பறைஆட்டம் பல பரிணாமம் அடைந்தது அனைத்துமே நரம்புகளில் ரத்தப்பாய்ச்சலை
உண்டாக்கியது. ஆனாலும் இந்த நிகழ்வு ஒரு பொழுது போக்கும் அம்சமாகவே அமைந்தது இதில்
எந்த அரசியலும் பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் கிடையது அந்த அளவிற்கு மக்களில்
உண்டான பிளவுகள் மேலோங்கி நின்றது இந்த தலித் கலைவிழாவில்.இனி தலித்
அரசியலுக்கு இது போன்ற ஒரு கலை நிகழ்வுக்கு .இனி
ஒரு தளத்தை தலித் ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அமைத்து கொடுத்தல் மட்டுமே
சாத்தியமாகும்
No comments:
Post a Comment