Friday, March 30, 2012

குழந்தைகளை சீரழிக்கும் சோட்டா பீம்


தற்போது தான் போகோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “சோட்ட பீம்என்ற கார்ட்டூன் தொடரைப் பார்த்தேன். அதில் ஒரு சிறுவன் மிகவும் அறிவுநிறைந்த மனிதனைப் போல் பேசுகிறான், மற்றவர்களுக்கு முன்னூதாராணம் போல் உள்ளான். ஆனால் அந்த சிறுவன் சட்டை அணிவதில்லை. காவி நிற வேட்டி மட்டும் அணிகிறான். அவனருகே ஒரு பெண் குழந்தை முழு ஆடையுடன் தன் மேனியை மறைத்திருக்கிறாள். அசுர வளர்ச்சியில் உள்ள ஒரு சிறுவன் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கிறான். அவர்களோடு ஒரு குரங்கும் உள்ளது. இதை விரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என் அண்ணன் மகன் ஸ்டாலின் பிரபாகரன். இரண்டு வயது கூட நிரம்பவில்லை, இதில் பார்ப்பனியத்தின் ஊடுருவல் என்று பார்க்கும் பொழுது ஒரு தெளிவான கருத்துக்களை சொல்பவன், பூனல் போடாத ஒரு ஆரியனாகதான் இருக்க வேண்டுமா? அதுவும், காவி நிற உடையில் தான் அந்த கதாநாயக சிறுவனாக இருக்க வேண்டுமா? அந்த சிறுவனுக்கு விலங்குகளில் குரங்குத்தான் ஆதரவாக செயலாற்ற வேண்டுமா? ஏன் அசுர வளர்ச்சியில் உள்ள ஆண்மகன் உள்ளாடை மட்டும் தான் அணிய வேண்டுமா? அந்த பெண்மணி கையில் விலங்கான மானை மட்டும் தான் ஏந்த வேண்டுமா? இவை அனைத்துமே ஆரியத்தின் சுழ்ச்சி. கார்ட்டூன் வடிவிலும் குழந்தைகளை தாக்க வந்துவிட்டது. அதிலும் கூட ஒரு சிறுவன் சொல்வதுதான் நியாயம், அவனை தான் பின்பற்ற வேண்டும், காலப்போக்கில் அவனையே தொழ வேண்டும் ஆகிய ஆரிய கருத்துக்கள் உங்கள் குழந்தைகளிடம் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள் மீதுள்ள அக்கறையில் இதை வெளிப்படுத்திகிறேன்.

2 comments: