Tuesday, October 11, 2011

இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே

OCT -8:அதிமுக அரசை அகற்றும் வரை ஓயமாட்டோம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 64 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பரமக்குடியில் நடந்த தலித் படுகொலை போன்று வேறு எங்கும் நடந்ததில்லை. 3 பேரை துப்பாக்கியால் சுட்டும், 3 பேரை தாக்கியும் காவல்துறை கொலை செய்திருக்கிறது. தலித் சமுதாய மக்களை ஆதிக்க சக்திகள் காவல் துறை துணையுடன் பழி வாங்கி வருகிறது. இதற்கு காரணமான முதல்வர் ஜெயலலிதா மீது வன்கொடுமை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தலித் இனத்திற்கு என்று நாட்டில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும் பரமக்குடி சம்பவத்திற்கு யாரும் முழுமையாக போராடவில்லை. தலித் இன மக்களை அழிக்கும் வகையில் செயல்படும் தமிழகத்தின் இந்த அரசை அகற்றும் வரை இந்திய குடியரசுக் கட்சி போராடும் என்றார்








1 comment:

  1. இதே போல் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete