சித்திரை வெண்கொற்றக்குடை திருவிழா என்பது கௌதம புத்தருக்கு(நீர்காத்த அய்யனார்) நடத்தப்படும் ஒரு முக்கிய திருவிழா
தேவேந்திரர்களான குடும்பன்மார்:


கருதப்பட்டதால்,புத்தர்,அதாவது இந்திரன் மழைக்கான தெய்வமாகக் கருதப்பட்டார்.நீர் தானே விவசாயத்திற்கான அடிப்படை! ஆற்றில் புதுப்புனல் புரண்டோடும் காலத்தில் எடுக்கப்படும் கொண்டாட்டம் இந்திரவிழா என்று அழைக்கப்பட்டது.
யானையைப் போலவே வெண்ணிறமும் பௌத்தத்தின் சின்னமாகக் கருதப்பட்டது.அதனால் இந்திரவிழாவின்போது யானையின்மீது வெண்ணிற உடைஉடுத்தி,வெண்சாமரம் வீசி,வெண்குடை பிடித்து இந்திரனை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வருவது இன்றளவும் நடைபெறுகின்றது. ராஜபாளையம் நகரிலுள்ள தேவேந்திரகள் 'நீர்காத்த அய்யனார் என்றழைக்கப்படும் புத்தருக்கு இந்தச் சடங்கை இன்றைக்கும் செய்கின்றார்கள்.

இந்த வரலாற்றை நாம் பார்க்கும்போது ஏப்ரல் 14இல் உலகமே போற்றி புகழும் அறிவாசன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் பிறந்தார் என்பதும் அதுபோல நாக்பூரில் சிலை வடிவம் கொண்ட வெள்ளையானை வணங்கி வருகின்றனர். இதை பொருத்தி பார்க்கும்போது கௌதம புத்தர் - புரட்சியாளர் அம்பேத்கர்- தேவேந்திர குல வேளாளர்கள் பற்றி நமக்கு ஒரு ஒப்பிடு கிடைக்கும் ஆகையால் நாளை 328வது சித்திரை வெண்கொற்றக்குடை திருவிழாவீல் அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம் மிக முக்கியம் இந்த திருவிழாவுக்கு செல்லும் முன்னர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டி மகிழ்ந்து விட்டு அனைவரும் ராஜபாளையம் நோக்கி செல்வோம்.
"வரலாற்றை விட வரலாற்று தலைவன் மிக முக்கியம்"
No comments:
Post a Comment