Thursday, April 23, 2015

வண்மையாக கண்டனம்



                                                வண்மையாக கண்டிக்கின்றோம்
தென் மாவட்டங்களில்பெரும்பான்மையினத்தவராக இருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள், இந்திரனை கடவுளாக மதிப்பவர்கள்,பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்றவர்கள்: இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள்
-அமித்ஷா






##############################################################################################################################################################################
பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்றவர்கள் என்ற வரிகளுக்கு மறுப்பு
தேவேந்திர குல வேளாளர்கள் மாடுகளை காப்பாற்ற காரணம் மாடு அவர்களோடு சரிசமமாகா விவசாய சகநண்பன் தவிர அவர்கள் மாடுகளை தெய்வமகா வழிபடவில்லை அவற்றை உணவாக உண்ணவும் இல்லை அதற்கான சிறந்த ஒரு வரலாற்று உண்மை
மாடுகளைக் காப்பாற்றுதல்
நன்செய் விவசாயத்தைத் தங்களது பண்பாட்டு அடையாளமாகவே மாற்றிக் கொண்ட தேவேந்திரர்கள் நிலவுடமைச் சமூக அமைப்பின் முதுகெலும்பாக நின்று பெரும் போராட்டத்தையே நிகழ்த்தவேண்டி வந்தது.கால்நடைச் சமூகத்து பழமைவாதிகளான பிராமணர்களை எதிர்த்த அவர்களது போரரட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.தங்களது விவசாய வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் கால்நடைகளை யாகம் என்ற பெயரில் வீணோகொன்று அழிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பெரும் சமூகப் போராட்டத்தையே அவர்கள் நிகழ்த்த வேண்டி வந்தது.
தேவேந்திரர்களின், பிராமணர்களுக்கு எதிரான போரரட்டம்,கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பிற்குமான மோதலாகவே கவனிக்கப்பட்ட வேண்டும்.கால்நடை வளர்ப்பு சமூகப் பிரதிநிதிகளாக பிராமணர்கள் ஒருபக்கமும்,நிலவுடமை சமூக அமைபப்புப் பிரதிநிதிகளாக தேவேந்திரர்கள் மறுபக்கமும் நின்று போராடினார்கள். அதாவது,பழமைக்கும் புதுமைக்கும் இடையே பொருத்த மோதல் உண்டானது. தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்று கொண்டிருந்தனர். நெல்லின் அறிமுகத்தாலும்,விவசாயம் என்ற புதியதொழில் முறையின் வளர்ச்சியாலும் சமூகத்தில் இத்தகைய மோதல் உருவான அதே காலகட்டத்தில் தான் பௌத்தம் என்ற சமயம் தனது வேர்களை அகலப்பரப்பி இந்த மண்ணில் தளைக்கத் துவங்கியது. அதற்கு முன்னர் இயற்கையின் காரணிகள் என்று சொல்லகூடிய மேகங்களையும் மழையும் மட்டுமே வணங்கி வந்த தேவேந்திரகுல வேளாளர்கள் பௌத்தத்திற்கு இந்திரன் என்று உருவன் அளவில் பெயர்சுட்டி பௌத்தை பின்பற்ற ஆரம்பித்தனர்.கருத்தியல் ரீதியாய் பிராமணர்களோடு சரிக்கு சரி போராடி வந்த பௌத்தம், நிலவுடமைச்சமூகம் அமைப்பின் மலர்ச்சியால் பிராமணர்களின் கொள்கைகளும்,மூட நம்பிக்கைகளும் வலுவிழந்து வருவதைக் கண்டதும், விவசாயக் குடிகளையெல்லாம் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யத்துவங்கியது.
ஆதி பௌத்தத்தின் சமூகப் பின்னணியை விளக்கமுனையும் பல்வேறு ஆய்வாளர்களும் இந்த கருத்தை தங்களது நூற்களில் பதிவு செய்துள்ளனர். ‘அரசு’ என்ற நிறுவனத்தின் தோற்றம்,வேளாண்மை என்ற தொழிலின் வளர்ச்சி,நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதிலான மோதல்கள், நிலத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்படும் போர்கள் என்று நிலவுடமை சமூகம் சந்தித்த பல்வேறு இன்னல்களையும், பௌத்த நூற்கள் ஆழமாக விவாதிக்கின்றன.வயிற்றிற்கு சோறிடுதல் எவ்வளவு உன்னதமான செயல் என்பதை விளக்காத பௌத்த நூற்களே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதானால்,வளர்ந்துவரும் புதிய நிலவுடமைச் சமூகத்தின் சமயமாகவே பௌத்தம் தன்னை வளர்த்தெடுத்து வந்துள்ளது.
பிராமணர்களின் பிறவிக் கோட்பாட்டையும் கண்மூடித்தனமாக கண்முடித்தனமாக சடங்காசாரங்களையும், வீணான உயிர்ப்பலியையும் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்திவந்த பௌத்தம்,உருவாகிவரும் புதிய நிலவுடமை சமூகத்தின் குரலாகத் தன்னை மற்றிக் கொன்டதில் வியப்பு ஒன்றும் இல்லை, மூடநம்பக்கைகளால் செய்யப்பட்ட பிராமணியத்தை வெற்றிகொள்வதற்கு, உழைப்பையும் அதன்மூலமான அபரிமிதமான உணவு உற்பத்தியையும் மேன்மைப்படுத்துவதற்கும் தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகவே பௌத்தம் இந்த தருணத்தைக் கணித்தது தேவேந்திரர்களுக்கும் பௌத்தத்திற்குமான உறவு வலுவான ஒன்றாக மாறத்துவங்கியதும் இந்த காலகட்டத்தில் தான் ஏறக்குறைய தேவேந்திரர்கள்,தேவேந்திரர்களாக அடையாளப் படுத்தப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். ’குடும்பன்மார்’ என்ற பாரம்பரிய அடையாளத்தோடு பயிரிடும் பழங்குடிகளாக வாழ்த்து வந்த இந்த சமூகம்,’நெல்’என்ற பயிர்வகையைக் கண்டுபிடித்து,அதனைப் பரந்த அளவில் விளைவிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் தன்னியல்பாக பௌத்தத்தோடு நெருங்கிவரத் துவங்கியது.பிராமணர்களின் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கும் பௌத்தம் தனக்கு சரியான ஆயுதமாக இருக்க முடியும் என்று நம்பியது.அதனால் தனது பண்பாட்டு அடையாளத்தையே கூட பௌத்த நெறிமுறைகளின்படி கட்டமைக்கத் தொடங்கியது.
#############################################################################################################################################################################
இந்திரனை கடவுளாக மதிப்பவர்கள், என்ற வரிகளுக்கு மறுப்பு
கௌதம புத்தருக்கான ஆயிரக்கணக்கான பெயர்களில் ‘இந்திரன்’ என்பதும் ஒன்று. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட முனிவர் என்பதால் புத்தர், ’ஐந்திரன்’ என்று அழைக்கப்பட்டார். ’ஐ’, ’இ’யாக மருவியதால் ஐந்திரன், இந்திரனாக அழைக்கப்பட்டார் .தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார் தொல்காப்பியரை ‘ஐந்திரன் அறிந்தவன்’ என்று பாராட்டுவதை,தொல்காப்பியர் பௌத்த நெறிகளைக் கற்றவர் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.’இந்திரன்’, ‘இந்திரன்’ என்றழைக்கப்பட்ட புத்தர் தெய்வமாக மாற்றப்பட்டபொழுது அவரோடு தொடர்புடைய பல விஷயங்களும் பலவிதமாக மாற்றப்பட்டன. புத்தரின் பிறப்பை அறிவிக்கும் கதையில் இடம் பெறும் ஐராவதம் என்ற வெள்ளை யானை.இந்திரனின் வாகனமாகக் கற்பனை செய்யப்பட்டது. விவசாயத்தை மையப்படுத்திய நிலவுடைமைச் சமூகத்தின் சமயமாக பௌத்தம் கருதப்பட்டதால்,புத்தர்,அதாவது இந்திரன் மழைக்கான தெய்வமாகக் கருதப்பட்டார்.நீர் தானே விவசாயத்திற்கான அடிப்படை! ஆற்றில் புதுப்புனல் புரண்டோடும் காலத்தில் எடுக்கப்படும் கொண்டாட்டம் இந்திரவிழா என்று அழைக்கப்பட்டது.
யானையைப் போலவே வெண்ணிறமும் பௌத்தத்தின் சின்னமாகக் கருதப்பட்டது.அதனால் இந்திரவிழாவின்போது யானையின்மீது வெண்ணிற உடைஉடுத்தி,வெண்சாமரம் வீசி,வெண்குடை பிடித்து இந்திரனை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வருவது இன்றளவும் நடைபெறுகின்றது. ராஜபாளையம் நகரிலுள்ள தேவேந்திரகள் 'நீர்காத்த அய்யனார் என்றழைக்கப்படும் புத்தருக்கு இந்தச் சடங்கை இன்றைக்கும் செய்கின்றார்கள்.
#############################################################################################################################################################################
இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள் என்ற வரிகளுக்கு மறுப்பு
இந்த இடத்தில் அம்பேத்கரின் கட்டுரையொன்று நமக்கு சில வெளிச்சங்களைக் காட்டமுடியும் என்று நினைக்கிறேன் .தீண்டாமையின் தோற்றம் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையொன்று தேவேந்திரர்களைப் புரிந்து கொள்வதில் நமக்குத் துணை செய்யமுடியும் .அந்தக் கட்டுரையில் அம்பேத்கர் ,தீண்டாமைக்கான காரணங்களை தேடத் தொடங்குகிறார் .என்னென்ன காரணங்களுக்காக சில சமுகங்கள் தீண்டப்படாதவை என்று அடையாளப் படுத்தப்படுகின்றன என்று பட்டியலிடத் துவங்குகிறார் .அந்தப் பட்டியல் நீளமானது .அதில் பத்து காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
1.பிராமணர்களின் மேலாண்மையை மறுத்தல் .
2.பிராமணர்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதாவது இந்து குருவிடமிருந்தோ மந்திர உபதேசம் பெறாதிருத்தல் .
3.வேதங்கள் மறுத்தல் .
4.இந்துக் கடவுள்களை வணங்காதிருத்தல் .
5.நல்ல பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாகக் கொள்ளாதிருத்தல் .
6.பிராமணப் புரோகிதர்களை ஏற்றுக் கொள்ளாதிருத்தல் .
7.சைவம் ,வைணவம் இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதது .
8.தொடுதலின் மூலமோ அல்லது அருகாமையில் நெருங்கி வருவது மூலமோ தீட்டை ஏற்படுத்துதல் .
9.இறந்தவர்களைப் புதைத்தல் .
10.மாட்டிறைச்சி உண்பதும் ,பசுக்களுக்கு சடங்குகள் ஏதும் செய்யாமலிருத்தலும்.
அம்பேத்கர் தனது கட்டுரையில் வரிசைப்படுத்தும் காரணங்கள் எவ்வளவு தூரம் தேவேந்திர சமுகத்திற்கு பொருந்தி வருகிறது என்று பார்க்கலாம்.
1.தேவேந்திரர்கள் என்றைக்குமே பிராமண மேலாண்மையை ஏற்றுக்கொண்டதில்லை .
2.பிராமணர்களிடமிருந்தோ,பிற இந்து குருக்களிடமிருந்தோ அவர்கள் மந்திர உபதேசம் பெறுவது இல்லை .
3.வேதங்கள் அவர்கள் கண்டுகொண்டதே இல்லை .
4.அவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குவது இல்லை .
நாட்டுப்புற தெய்வங்களையே கொண்டாடுகிறார்கள்.
5.பிராமணர்கள், அவர்களின் குடும்ப புரோகிதர்கள் அல்ல .
6.பிராமணப் புரோகிதர்களை அவர்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. தங்களுள் ஒருவரான வாதிரியார்களையே அவர்கள் இதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர் .
7.சைவம் ,வைணவம் இந்துக் கோவில்களின் உள்ளே இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆகா என்றுமே தேவேந்திரர்கள் சைவ மற்றும் வைணவவத்தை பின்பற்றவும் இல்லை வளர்க்கவும் இல்லை என்ற உண்மை தெரிகின்றது.
8.தொடுதலின் மூலமோ அருகாமையில் நெருங்கி வருவதன் மூலமோ இவர்களால் தீட்டு ஏற்படுவதில்லை .
9.தேவேந்திரர்கள் இறந்தவர்களைப் புதைக்கிறார்கள் .
10.மாட்டு இறைச்சி உண்பது இல்லை;பசுக்களுக்கு சடங்குகளும் செய்வது இல்லை .
இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் .
தேவேந்திரர்கள் ஹிந்துக்கள் இல்லைஎன்பது இந்த பத்து காரணங்களினால் ஆறு காரணங்கள் பிராமணர்களோடு தொடர்புடையன தான் .அடிப்படையில் ,தேவேந்திரர்களின் பண்பாட்டோடு பிராமண எதிர்ப்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தான் இந்தக் காரணங்கள் சுட்டுகின்றன.
பிறகு எப்படி தேவேந்திர குல வேளாளர்கள் இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள் என்பது தான் இங்கே மிக பெரிய கேள்வி
ஆக பாஜக தேசிய தலைவரர் அமித்ஷா அவர்களின் பதிவை வண்மையாக கண்டிக்கின்றோம்

No comments:

Post a Comment